இரண்டு வருடங்கள் நடிக்க மறுப்பு: ஜோஜூ ஜார்ஜ்

 மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் எழுதி நடித்து, இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘பணி’ திரில்லர் கதையான இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், அப்படம் தமிழில் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் ஸ்ரீகோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பேசுகையில், ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நம்பி வந்திருக்கிறேன். இங்குள்ள எனது நண்பர்கள் சொன்னதாலேயே தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறேன்.



இந்தப் படத்தை இயக்க, 2 வருடங்கள் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தேன். மணிரத்னம், கமல்ஹாசன், விக்ரம், கார்த்திக் சுப்பராஜ் என்னை ஆதரித்தனர். சந்தோஷ் நாராயணன் ஒரு ஸ்பெஷல் பாடலைக் கொடுத்தார்’ என்றார். எம்.ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், ‘நாடோடிகள்’ அபிநயா, அபயா ஹிரன்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய், சாம் சி.எஸ் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url