திடீரென படப்பிடிப்பில் இருந்து திரும்பிய த்ரிஷா, காரணம் என்ன?

 அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த த்ரிஷா திடீரென சென்னை திரும்பி உள்ளார்.

இங்கு அவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை திரும்பி உள்ளதாகவும், அந்த விளம்பரத்தில் நடித்து முடித்தவுடன் அவர் மீண்டும் ஸ்பெயின் சென்று ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, த்ரிஷா அஜித்துடன் ’விடாமுயற்சி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும், அந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ மோகன்லால் உடன் ’ராம்’, கமல்ஹாசன் உடன் ‘தக்லைஃப்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url