''சூர்யா 45'' ஹீரோயின் இவரா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!

               சூர்யாவுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ படத்தினை முடித்துள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தனது 45-வது படத்தினை இயக்கும் பொறுப்பை ஆர்.ஜே.பாலாஜியிடம் கொடுத்துள்ளார் சூர்யா. இப்படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.



நவம்பரில் ‘சூர்யா 45’ முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தையை படக்குழு நடத்தியுள்ளனர்.

தற்போது இறுதியாக மிருணாள் தாக்குரிடம் பேசிருக்கிறார்கள். படப்பிடிப்புக்கான தேதிகளை வைத்து தன்னுடைய தேதிகளை நிச்சயம் ஒதுக்கி தருவதாக படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளாராம். இப்போது படக்குழுவினரோ படப்பிடிப்புகான தேதிகளை முடிவு செய்து வருகிறது படக்குழு. விரைவில் அனைத்து பேச்சுவார்த்தையும் முடித்து மிருணாள் தாக்குர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் மிருணாள் தாக்குரின் தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் படமாக ‘சூர்யா 45’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url