கிருஷ்ணகிரி பாரூர் அருகே, குட்டையில் தவறி விழுந்து அக்காள்-தம்பி பலி

பாரூர் அருகே குட்டையில் தவறி விழுந்து, அக்காள், தம்பி பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 38). இவரது மனைவி தவமணி (32). இவர்களுக்கு இளவரசி (7), இசைப்பிரியா (1) என்ற 2 மகள்களும், சிவகார்த்திகேயன் (5) என்ற மகனும் இருந்தனர். தவமணி தன் குழந்தை களுடன், பாரூர் அருகே உள்ள அரசம்பட்டியில் நரேஷ் (40) என்பவரின் தென்னந்தோப்பில் தங்கியிருந்து, கடந்த 6 மாதமாக காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

சிறுமி இளவரசி அரசம் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தவமணி தென்னந்தோப்பில் காவல் பணியில் ஈடுபட்டு இருந் தார். இதனால் இளவரசி, தனது தம்பி சிவகார்த்தி கேயனுடன் அதேபகுதியில் இருந்த முருகன் என்பவரது விவசாய கிணற்றின் அருகே தென்னம் மட்டை களை ஊற வைப்பதற்கு அமைக்கப்பட்டு இருந்த குட்டை அருகே சென் றாள்.

அப்போது அக்காள், தம்பி 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி குட்டையில் விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு தவமணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக் கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர் கள் குட்டையில் இருந்து குழந்தைகளை மீட்டு, பாரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு, குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர், 2 பேரும் ஏற் கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். குட்டையில் தவறி விழுந்து அக்காள்- தம்பி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அண்ணா மேம்பாலம் அருகே விபத்து: டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பாமாயில் - பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்து கொட்டிய பாமாயிலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நோக்கி டேங்கர் லாரி ஒன்று நேற்று மதியம் புறப்பட்டது. லாரியில் சுமார் 24 டன் அளவிலான பாமாயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் ஏறி கீழே இறங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் சாலை தடுப்பில் லாரியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன.


இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து அதில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டி அருகே இருந்த தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் குடங்களையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் கொண்டு வந்து பாமாயிலை பிடிக்க தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணியில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். முதற்கட்டமாக தீப்பற்றாமல் இருக்க லாரியில் இருந்த ‘பேட்டரி’ அகற்றப்பட்டது. டீசல் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து டீசல் டேங்கில் ரசாயன நுரை பீய்ச்சியடிக்கப்பட்டது. பின்னர் சாலையில் ஆங்காங்கே தேங்கியிருந்த பாமாயிலை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழாமல் இருக்க உமியும், மணலும் கொட்டப்பட்டன. இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் முருகன் உயிர் தப்பினார்.

பின்னர் ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சாலையில் கொட்டிய பாமாயிலை பயன்படுத்த வேண்டாம் என்று தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டனர். இதனை பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் பாமாயிலை பாத்திரங்களில் எடுத்துச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆத்தூர் அருகே, ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
ஆத்தூர் அருகே ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமம் வடகாடு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலை உள்ளது. இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்கை அரைத்து மாவு மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த ஆலை குறைந்த அளவிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஜவ்வரிசி ஆலையில் சதாசிவபுரம் வடக்குகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), இவரது அண்ணன் அல்லிமுத்து என்பவரது மகன் கார்த்தி (20) உள்பட சிலர் நேற்று வேலை பார்த்தனர். அப்போது நேற்று அதிகாலை மரவள்ளிக்கிழங்கை அரைத்த பிறகு அழுக்கு மாவு தொட்டிக்கு செல்லும் குழாயின் கேட் வால்வை திறக்க கார்த்தி முயன்றார். அப்போது குழாயில் திடீரென்று விஷவாயு கசிந்துள்ளது. இதனால் கார்த்தி மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், கார்த்தியை காப்பாற்ற ஓடிச்சென்று தொட்டியில் இறங்கினார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் ஆறுமுகம், கார்த்தி 2 பேரும் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் ஜவ்வரிசி ஆலைக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆறுமுகம், கார்த்தி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆறுமுகத்துக்கு செல்வி என்ற மனைவியும், வாசு, பரணி என்ற 2 மகன்களும் உள்ளனர்.

விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் ஆத்தூர் சதாசிவபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]