கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்ற பீடா கடைக்காரர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்ற வடமாநிலத்தை சேர்ந்த பீடா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித்(வயது 43). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பக்கத்தில் தங்கி, அதே பகுதியில் பீடா கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்திரஜித், வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தார்.

இதனால் அவர், வலி நிவாரணி மாத்திரை, சளி, காய்ச்சல் மாத்திரை மற்றும் இருமல் மாத்திரைகளை பொடியாக்கி அவற்றை சிறிய கவரில் போட்டு, கொரோனா வைரசுக்கு மருந்து என்று கூறி விற்றால் பொதுமக்கள் வாங்கி விடுவார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டார்.

இதையடுத்து இந்த போலி மருந்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் பொதுமக்களிடம் கூவி கூவி விற்க தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீசாரை கண்டதும் இந்தரஜித் ஓட தொடங்கினார்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்திரஜித்தை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, பரோலில் வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். தற்போது கொரோனா வைரசுக்கு பயந்து வீட்டுக்கு வந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரவி என்ற வெள்ளை ரவி (வயது 45). ஒரு கொலை வழக்கில் 2014-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

full-width 25.7.14 அன்று புழல் மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் உள்ள குமரன் நகரில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்தார். ஆனால் பரோல் முடிந்ததும் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கடந்த 6 ஆண்டுகளாக தேடி வந்தனர்.

ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு ரவி, ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா கெங்கம்மாகுடி என்ற இடத்தில் வீடு எடுத்து தனியாக தங்கி, அங்கு துணி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சம் அடைந்த ரவி, ஆந்திராவில் இருந்து மீண்டும் திருவொற்றியூருக்கு வந்து சாத்தாங்காடு பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதுபற்றி தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் ரவியை கைது செய்து அருகில் உள்ள சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 ஆண்டுகள் போலீசாரை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி ரவியை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பேரையூர் அருகே டாஸ்மாக் மதுவுடன் கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரிப்பு - மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் கைது
டாஸ்மாக் கடை மதுவுடன் வேறு பொருட்களை கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரித்தது தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ‘குடி’மகன்களுக்கு மது கிடைக்காததால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதற்கு அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை மதுவுடன் போதை பொருட்களை கலந்து புதிவித மதுபானமே தயார் செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சிலைமலைபட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபு(வயது 32) மற்றும் நரசிங்காபுரத்தை சேர்ந்த சக்திவேல்(48), லட்சுமிபுரத்தை சேர்ந்த சிவபெருமாள் என தெரியவந்தது.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் காலியாக கிடந்தன. அருகில் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் மதுபானம் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் மதுபானத்துடன், கூடுதல் போதைக்காக வேறு சில பொருட்களை கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயார் செய்து டிரம்மில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கீழப்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக மொத்தமாக கொடுத்ததும் தெரியவந்ததால், செல்வமும் கைது செய்யப்பட்டார். இதே போல் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபுவும் தன் பங்குக்கு மதுபானங்களை கொண்டு வந்ததாக தெரியவருகிறது.

இதைதொடர்ந்து கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தயார் செய்து வைத்திருந்த மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url