சென்னையில் 'சிறை அனுபவம்' தரும் உணவகம்





சிறைக்குப் போகக் `கொடுத்து` வைக்காதவர்களுக்கு, சிறை அனுபவம் தருகிறது இந்த சென்னை உணவகம்
இந்த உணவு விடுதியின் மேசைப்பணியாளர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் கைதிகள் போன்றே உடையணிகின்றனர்.

சிறைச்சாலையை ஒத்த உள்ளரங்க வடிவமைப்பு கொண்டுள்ள இங்கு, முழுமையாக சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன.
இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறைக்கூட வடிவ அறைகளில், `கம்பி எண்ணிக்கொண்டே` இங்கு உணவு உண்ணலாம்.
குடும்பமாக அல்லது குழுவாக வருபவர்களுக்கு இந்த தனி “சிறைக்கூடங்கள்” ஒதுக்கப்படுகின்றன.

சினிமாவில் மட்டுமே சிறைச்சாலையை பார்த்திருப்பவர்களுக்கு, இது புதிய அனுபவத்தை கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
சுவர்களும், இருட்டும், இரும்புக் கம்பிகளும், இங்கு உணவு உண்ண வருபவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url