எந்த ஆட்சியிலும் கொலை, கொள்ளை சகஜம்: முதல்வர் பழனிசாமி





சென்னை:

 "எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது இயல்புதான்" என முதல்வர் பழனிசாமி கூறினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பல்வேறு தடயங்கள், ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை , கொள்ளை நடப்பது இயல்புதான். குற்றங்களுக்கு எப்படி தீர்வு காண்கிறோம் என்பதில் தான் அரசின் செயல் இருக்கிறது. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கின்றனர். திமுக ஆட்சியில் எவ்வளவு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது பற்றி புள்ளி விவரம் சொல்ல முடியும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url