டி20 ஓவர் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
கிங்ஸ்டன்:
இந்தியாவுக்கு எதிரான டி20 ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்தி 48, கோலி 39, ரிசப் பண்ட் 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்ல்-லிவிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். லிவிஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை நிலைகுலைய செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய லிவிஸ் 125 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும்.