சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டி : வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து




ஓவல்: மினி உலகக்கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது

பின்னா் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 308 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் அதிகபட்சமாக  133 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களும், அந்த அணியின் கேப்டன் இயான் மார்கன் 75 ரன்களும் எடுத்தனா்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url