போலிசாக நடிக்க வருகிறார் சிம்ரன்








பாலிவுட்டில் சென்ற வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக பட்டையைக் கிளப்பிய படம் ‘மர்தாணி’. பெண்கள் காணாமல் போதல் அதைத் தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் என படம் சமுதாயத்தின் இன்னொரு முகத்தைப் பிரதிபலித்தது.   இதில் பெண் போலீஸாக நடித்த ராணி முகர்ஜி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதே பாணியிலான ஒரு படம் தமிழில் உருவாக இருக்கிறது. இதில் சிம்ரன் போலீஸாக நடிக்கிறார். திருமணமாகி செட்டிலானவர் மீண்டும் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ’த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கவும் செய்தார்.  தற்போது நாயகியாக களமிறங்க உள்ளார். அறிமுக இயக்குநர் கௌரி கிருஷ்ணா இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். இவர் விளம்பரப் படங்களை இயக்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் குறித்து கௌரி கிருஷ்ணா கூறுகையில், சிம்ரன் நாயகியாகவும் மேலும் போலீஸாகவும் நடிக்கிறார். பாலிவுட்டின் மர்தாணி போன்ற கதையம்சமும் , அறிவியல் சார்ந்த கதையாகவும் உருவாக இருக்கும் இப்படம் நவம்பரில் துவங்க இருப்பதாக கூறியுள்ளார்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad