படமெடுத்தால் நஷ்டம் வருகிறதா? படமெடுக்காதீர்கள் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அதிரடி பேச்சு






நடிகர் மன்சூர் அலிகான் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்க மேற்பார்வை செய்து,நடித்து, ராஜ்கென்னடி படநிறுவனம் சார்பில்  தயாரித்துள்ள படம் 'அதிரடி'.
மன்சூர் அலிகானுடன் மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி, செந்தில் மற்றும் டாப்சி அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள்  நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது.  இவ்விழாவில் பேசிய மன்சூர்அலிகான், "தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விழாவுக்கு வரவேண்டியது அவர்கள் கடமை, வருவார்கள் என்று பெயர்கள் போட்டிருந்தேன். யாரும்  வரவில்லை. நான் அதுபற்றிக் கவலைப்படுவதும் கிடையாது.
நான் யாருக்கும் பயப்படுவதும் இல்லை. நான் உருவாக்கியிருக்கும் 'டாப்சி' யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை. மற்ற சங்கத்தில் சேர 5 லட்சம் வாங்குகிறார்கள். நான் வெறும் 2000 வாங்கிக் கொண்டு இந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்.  சினிமா நிரந்தரமில்லை. எம்.ஜி.ஆர். வந்தார் சிவாஜி வந்தார். இன்று இல்லை. நாளை  நானும் இல்லை.6 ஆண்டுகளுக்குமுன் கார்த்தி யாரென்று தெரியுமா? 5 ஆண்டுகளுக்கு  முன் விஜய் சேதுபதி யாரென்று தெரியுமா? இன்று பெரிய நடிகர்களாக அவர்கள் வரவில்லையோ? ஆனால் தொழிலாளி மட்டும் புதிதாக வரக் கூடாதா? ''என்றார்.  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது "  இன்றைக்குள்ள முக்கியபிரச்சினை  மதுவிலக்கு, சினிமா  இது இரண்டையும் பற்றி மன்சூர்அலிகான் படமெடுத்துள்ளார். அவர் செய்வது சில நேரம்  பைத்தியக்காரத்தனம்  போல் தெரியும்.ஆனால் அதில் மனிதாபிமானம் இருக்கும். அவர் தொழிலாளர்களின்  கஷ்டம் புரிந்தவர். அன்றன்று சம்பளம் கொடுப்பவர் இது தவறா? இவ்விழாவுக்கு எங்கள் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து யாரும் வரவில்லை.
இவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்தானே? சங்கத்தில் தலைவர்கள்  எல்லாருக்குமா வேலை? வாழ்த்த எண்ணமில்லை,யாரும் வரவில்லை. இதில் காட்டும்  ஒற்றுமையை தொழில் வளர்ச்சிக்காகச் செய்யுங்கள் .அவர்களது செயல்பாடுகள்  ஏட்டளவில்தான் இருக்கிறது ஒருதயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு வரைதான்  சிரிக்கிறான்.பிறகு படம் வெளியிடும்வரை அழுகிறான்.
தயாரிப்பாளர் பிரச்சினை தீர  தயாரிப்பாளர் சங்கத்தில் வழி கேட்டால் படமெடுத்தால்தானே நஷ்டம் வருகிறது? நஷ்டம் வருகிறது என்றால் படமெடுக்காதே என்கிறார்கள்.இது சொல்லத்தானா தயாரிப்பாளர் சங்கம்? ''என்றார்.  தயாரிப்பாளர் ஒருவரே தயாரிப்பாளர்கள் சங்கத்தை விமர்சனம் செய்து பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad