விஜய் கொடுத்த 5 கோடி! சிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தை!







நடிகர் விஜய் நடித்த புலி படம் சுமார் ரூ100 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகவிருந்தது. இன்று காலை 4மணிக்கு, 7 மணிக்கும் திரையிடப்பட வேண்டிய சிறப்புக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் நேற்றிரவே பல மல்டி திரையரங்குகளில் புக்கிங் செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்பட்டு பணம் திரும்ப தரப்பட்டுவந்தன.
படம் வெளியாகாமல் போனதற்கு கடைசிநேர பணம் செட்டில்மெண்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. 10 கோடிரூபாய் பாக்கி தொகையை செட்டில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாம்.
நேற்றிரவு முழுவதும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய், புலி படத் தயாரிப்பாளர்கள், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், மன்னர் பிலிம்ஸ் மன்னர், டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படம் வெளியாவதற்காக விஜய் மட்டும் 5 கோடிரூபாய் தந்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலைவரை நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறதாம்.
இன்று காலை 10மணிக்கு மேல் உள்ள காட்சிகளில் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad