நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி- மசாலாப்பட விழாவில் கலகலப்பூட்டிய சுரேஷ்கிருஷ்ணா














       சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் சினிமா குறித்த

விமர்சனங்கள், விவாதங்கள் மற்றும் சினிமாவிற்குள் இருக்கும்

விஷயங்களைக்   கையாண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் மசாலாப் படம்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்து

இயக்கியிருக்கிறார்.

மிர்ச்சிசிவா, பாபிசிம்ஹா, லட்சுமிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. ஆடியோ

வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் பாட்ஷா பட இயக்குனர்

சுரேஷ் கிருஷ்ணா.

‘‘இது கதையே இல்லாத ஒரு படம். ஆனால் இப்படத்தில் எல்லாம்

இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் கார்டிலேயே உருவாக்கம், இயக்கம் -


லக்‌ஷ்மண் குமார் என்று தான் போட்டிருக்கிறார்கள். இப்படத்தை

பொறுத்தவரை அது தான் பொருத்தம்.

நாம்  ஒரு காஃபி ஷாப்புக்குப் போனால் அங்கு அதிகமாகப் பேசப்படும்

விஷயம் சினிமா, அரசியல் அல்லது கிரிக்கெட்டாக தான் இருக்கும். அப்படி

சினிமா குறித்து பொதுவாகப் பேசப்படுகிற விஷயங்களைத் தான்

இப்படத்தின் இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் மசாலாப்படமாக்கியிருக்கிறார்.

இது ஒரு புது ஜானர் படம்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை யாராலும் யூகிக்க முடியாது. யாரும்

எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸுடன் இப்படத்தை முடித்திருக்கிறார்கள்.

‘மசாலா’ படத்தை பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்

இப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும். நான் ஒரு தடவை சொன்னால் நூறு

தடவை சொன்ன மாதிரி’’ என்றார் .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad