தெரிஞ்சோ தெரியாமலோ திருடிக்கொண்டுதானிருக்கிறோம் - சிவகார்த்திகேயன்

தெரிஞ்சோ தெரியாமலோ திருடிக்கொண்டுதானிருக்கிறோம் - சிவகார்த்திகேயன்








கவுண்டமணி ஹீரோவாக நடிக்க விரைவில் வரவிருக்கும் படம் 49ஓ. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் பேசுகையில் கவுண்டமணி சார் தான் எங்களைப் போன்ற பலருக்கும் ரோல் மாடல். என்னை ட்ரெண்ட் நடிகர்னு சொல்றாங்க. உண்மையாவே இப்பவும் ட்ரெண்ட் நடிகர் கவுண்டமணி சார் தான்.

சமீபத்தில் அவரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் அவர் தனது ரிங் டோனை மாற்றி விட்டேன் இப்போது ஃபாஸ்ட்& ஃபியூரியஸ் டோன் அப்படினு சொன்னாரு. இப்போ சொல்லுங்க யாரு ட்ரெண்ட் செட்டர்னு. அவர் கிட்ட பேசும் போது கூட சொன்னேன் உங்களோட காமெடிகள் எங்களுக்குள்ள இருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க திருடித் திருடி வித்துகிட்டுத்தான் இருக்கோம். இந்த விஷயத்தக் கூட அவர் கிட்ட சொன்னவுடனே, அட இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதுதானப்பா என அசால்ட்டாக கமெண்ட் அடித்தார்.

   திரும்ப நீங்களும் சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கணும் சார் முடிஞ்சா அதுல எனக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார். இதுதான் என் ஆசை.

49ஓ அரசியல் கலந்த விவசாயம் பத்தின படம். அந்த விஷயத்த காமெடி கலந்து சொல்லணும்னா கவுண்டமணி சாராலதான் முடியும். அவர மிஞ்சின ஆள் இதுவரை இல்ல, இனிமேலும் இல்ல. திரும்ப ஸ்கிரீன்ல கவுண்டமணி சார பார்க்கப்போறோம்ங்கற சந்தோஷம் எங்க எல்லாருக்கும் இருக்கு.

எனக்கு உங்கள மீட் பண்ண சான்ஸ் குடுத்ததுக்கு தயாரிப்பாளர் சிவபாலன் சார்க்கு நன்றி . இப்படி சிவகார்த்திகேயன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே கூட்டத்தில் இருந்து கவுண்டமணி சார் மாதிரி பேசுங்க என கேட்க. சும்மா இருங்க சார், கவுண்டமணி சார் மாதிரி பேசணுமாம். அப்பறம் அதுக்கும் அவரு கவுண்ட்டர் குடுத்துருவாரு. அதுக்குத்தான் நான் இருக்கேன்ல அவன் என்னாத்துக்கு பேசுறான்னு சொல்லிடுவாரு எனக் கூறி படத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு கலகலப்பாகப் பேசி முடித்தார் சிவகார்த்திகேயன்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad