விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு





விமானப்படை வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல்

தாம்பரத்தில் தொடங்கப்பட உள்ளது.

 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி

குறிப்பு: திருமணம் ஆகாத இளைஞர்களுக்கான, இந்திய விமானப்படை

வீரர்கள் தேர்வு, வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை

தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் நடைபெற உள்ளது.

கடந்த 1998 ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், 1999 ஆண்டு மே 31-ஆம்

தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 மற்றும் அதற்கு

மேற்பட்ட தகுதியுடன், 50 சதவீத மதிப்பெண்ணுடன், ஆங்கிலத்தில், 50 சதவீத

மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 2239 6565 என்ற தொலைபேசி எண்ணிலோ

அல்லது www.indianairforce.nic.in என்ற இணையதளத்திலும் அறியலாம் என்று

அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad