முருகதாஸ் படக்குழுவினர் கள்ளநோட்டு வழக்கில் சிக்கினார்களா












முருகதாஸூம் பாக்ஸ்ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம்

ரங்கூன். கௌதம்கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை

ராஜ்குமார்பெரியசாமி என்கிற புதுஇயக்குநர் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காகச் சில மாதங்களுக்கு முன்பு பர்மா

போனார்கள். போனஇடத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச்

சொல்லப்படுகிறது.

படப்பிடிப்புக்காக இவர்கள் அச்சடித்துச் சென்ற பர்மா கரன்சிகளைப் பார்த்த

பர்மா காவல்துறையினர், கள்ளநோட்டுகள் என்று சந்தேகப்பட்டு

படக்குழுவினரைத் தடுத்து வைத்துவிட்டார்களாம். அதனால் படப்பிடிப்பு

நடத்த முடியாமல் திரும்பி வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இடையில் கொஞ்சகாலம் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. பர்மாவில்

படமாக்கவேண்டிய காட்சிகளை பாங்காக் போய்ப் படமாக்க முடிவுசெய்து

அங்கு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad