ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ : சமுத்திரகனி !



                                         சினிமாவில் பல படங்களை இயக்கியவர் சமுத்திரகனி. நாடோடிகள்தான் அவர் இயக்கியதில் மெகா ஹிட் படம். கடைசியாக ஜெயம்ரவியை வைத்து நிமிர்ந்து நில் என்ற படத்தை இயக்கினார். பின்னர் இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்க கிட்னா என்ற பட வேலைகளில் இறங்கினார். அந்த நேரம் பார்த்து அவரது சினிமா மார்க்கெட் சூடுபிடித்து விட்டது. அதனால் அந்த பட வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு முழுநேர நடிகராகி விட்டார். அதோடு, பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போன்றே நடிக்கிறார். வில்லனாக நடிக்கும் படங்களிலும் அவருக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதோடு ஹீரோக்களுக்கு இணையாக சமுத்திரகனிக்கும் படப்பிடிப்புகளில் தடபுடல் கவனிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆரம்பத்தில் மந்தமாக இருந்த அவரது படக்கூலி சமீபகாலமாக மளமளவென்று அதிகரித்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]