நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்: சிம்பு !




                                              சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் கடந்த 14ந் தேதி வெளிவந்தது. நேற்று படத்தின் வெற்றி விழாவை டி.ராஜேந்தர் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது: வாலு படத்துக்கு பல இடையூறுகள் பல வழிகளில் இருந்து வந்தது. இளைய தளபதி விஜய் அண்ணன், எனது அப்பா, அப்பா ஆகியோரின் உதவியாலும் ரஜினி சார், அஜித் சார் ஆசீர்வாதத்துடனும் படம் வெளிவந்து நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்துக்கு வந்த பிரச்சினைகளுக்கான காரணத்தை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். எதையும் தாங்கும் சக்தியை எனக்கு கொடுத்திருக்கிறான். இனிமேல் வருடத்துக்கு இரண்டு அல்லது 3 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். தற்போது இது நம்ம ஆளு, கவுதம்மேனன் சார் படம், செல்வராகவன் சார் படத்தில் நடித்து வருகிறேன். நானும் நயன்தாராவும் கோபித்துக் கொண்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியவில்லை, சில சூழ்நிலையால் பிரிய நேர்ந்தது. கருத்து வேறுபாடு இல்லாததால்தான் மீண்டும் இணைந்து நடிக்கிறோம். காதலில் நிறைய அடிபட்டு விட்டேன். இனி என் காதலையும், திருமணத்தையும் ஆண்டவன் தீர்மானித்துக் கொள்வான். இப்போது நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக நீங்கள்தான் சொல்கிறீர்கள். இருவருமே எனது நண்பர்கள்தான். இருவரும் காதலித்தால் எனக்கு சந்தோஷம்தான். அது உண்மை என்றால் அவர்கள் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன். என்றார் சிம்பு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]