சிம்பு படத்துக்கு இனி நயன்தாராவின் கால்ஷீட் இல்லை !



                                    வாலு படம் தொடர்பான பஞ்சாயத்துக்களை சமாளித்து ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் டி.ராஜேந்தர். விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று வரை வாலு படத்தின் வசூலுக்கு எந்த பாதகமும் இல்லை. படம் தேறுமா தேறாதா என்பது இன்றைய வசூலை வைத்தே சொல்ல முடியும் என்பது ஒரு பக்கம் இருக்க, டி.ராஜேந்தருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இது நம்ம ஆளு படம் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் கிடப்பில் கிடக்கிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர், பாண்டிராஜிடம் போட்ட ஒப்பந்தத்தின்படி பணம் கொடுக்கவில்லை. அதனால் பல தடவை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக நயன்தாராவிடம் வாங்கிய கால்ஷீட்டை பயன்படுத்தாமல் சுமார் பத்து தடவைக்கு மேல் வீணடித்திருக்கின்றனர். தவிர அவருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியையும் கொடுக்கவில்லை. இந்த பிரச்சனைகளை மனதில் வைத்து இது நம்ம ஆளு படத்துக்கு இனி கால்ஷீட் தரவே மாட்டேன் என்று பாண்டிராஜை அழைத்து கறாராக சொல்லிவிட்டாராம் நயன்தாரா. இந்த விஷயத்தை, டி.ராஜேந்தரிடம் பாண்டிராஜ் சொல்ல, புரட்யூசர் கவுன்சிலில் புகார் கொடுத்து நயன்தாராவின் கால்ஷீட்டை நான் வாங்கித்தருகிறேன் நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார் டி.ஆர். இரண்டு தரப்புக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் பாண்டிராஜ்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]