ஹீரோக்களைக் கலாய்க்கும் கவுண்டமணி !



                                      கவுண்டமணி நடிக்கும் போது காட்சிகளில் மட்டுமல்ல வெளியிலும் கதாநாயக நடிகர்களை கிண்டலடிப்பவர்; கலாய்ப்பவர்; சதாய்ப்பவர். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்தப் படத்தின் தலைப்பே கவுண்டமணியை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் போல் யாருமில்லை என்பதைச் சொல்லும்படி எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்று வைத்துள்ளார்கள். படக்கதையும் சினிமா பின்புலம் சார்ந்ததுதான். படத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு கேரவான் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார் கவுண்டமணி. இதை சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். கதைப்படி கைநிறைய பணம் மனம் நிறைய ஜாலி என்று இருக்கிற கவுண்டமணி படப்பிடிப்பில் நடிகர்களைக் கேலி செய்கிறாராம். பாம்புச் சட்டைக்குப் பட்டனில்லை. பொக்கவாய்க்கு மட்டனில்லை; கழிசடை எல்லாம் சித்தனில்லை; எனக்கு வேறு எங்கும் கிளைகள்இல்லை என்றெல்லாம் பாட்டுப் பாடுகிறாராம். மற்றவர்களுக்கு உதவுகிற அவர், காதல் திருமணங்கள் எல்லாம் செய்து வைக்கிறாராம். அப்படிச் செய்யும்போது ஒரு முறை சிக்கலில் மாட்டிக் கொள்கிறாராம். இப்படிப் போகிறது கதை. படம் வந்தால் கவுண்டமணியின் சாம்ராஜ்யம் மீண்டும் தொடங்கும் என்கிறது படக்குழு. சரி அதையும்தான் பார்ப்போமே.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]