குண்டான தோற்றத்துடன் வெளியில் வந்த அனுஷ்கா !




                                                பாகுபலி படத்தின் வெற்றி அனுஷ்காவின் குண்டான தோற்றத்தை வெளிக் கொண்டு வந்து விட்டது. பாகுபலி படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படக்குழுவினர் ஐதராபாத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தக் கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கையில் குழந்தையை வைத்திருக்கும் பாகுபலி படத்தின் காட்சி ஒன்று கேக்காக உருவாக்கப்பட்டிருந்தது. இயக்குனர் ராஜமௌலி கேக்கை வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையைக் கூட்டி குண்டான தோற்றத்தில் உள்ள அனுஷ்காவும் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பாகுபலி படத்தின் இசை வெளியீட்டிற்குப் பிறகு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத அனுஷ்கா, அந்த குண்டான தோற்றத்தில் வந்து கலந்து கொண்டார். இந்த தோற்றத்தை வெளியில் காட்டக் கூடாது என்ற முடிவிலிருந்த அனுஷ்காவை பாகுபலி படத்தின் வெற்றி மாற்றிவிட்டது. இஞ்சி இடுப்பழகி படப்பிடிப்பு முடிவடைந்ததும் அனுஷ்கா மீண்டும் பழைய பொலிவுடன் வந்து பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]