பாகுபலிக்கு பிறகு இரு மொழி நடிகராகிறார் பிரபாஸ்!




                                                            நான் ஈ-க்கு பிறகு புலி படத்தில் வில்லனாக நடித்துள்ள கன்னட நடிகர் சுதீப், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மூலம் நேரடியாக தமிழில் ஹீரோவாக நடிக்கிறார். இதன்பிறகும் தொடர்ந்து தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார் அவர். இந்நிலையில், இதுவரை நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்காத தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பிரமோத்சவம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. அவரைப்போலவே தெலுங்கு சினிமாவின் இன்னொரு முக்கிய நடிகரான பிரபாஸ் நடிப்பில் பாகுபலி படமும் தமிழ், தெலுங்கில் தயாராகியிருக்கிறது. ஆக, மகேஷ்பாபு, பிரபாஸ் என்ற இரண்டு தெலுங்கு நடிகர்களும் தமிழ் சினிமாவில் நேரடியாக கால்பதிக்கின்றனர். இதில், பிரபாஸ், பாகுபலிக்குப்பிறகு அவ்வப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படங்களாக நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url