பாக்ஸ் ஆபிசில் பட்டையைக்கிளப்பும் மாரி




                                                    ராதிகாவின் தயாரிப்பில், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்க பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி படத்தின் மீதான விமர்சனங்கள்  கடுமையாக இருந்தாலும் கலெக்ஷனுக்கு பஞ்சமில்லை. பாக்ஸ் ஆபிசில் மாரி படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மாரி திரைப்படத்தின்மீது அனிருத்தின் பாடல்கள், தனுஷின் தர லோக்கல் டான்ஸ் என ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மாரி படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.  முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 5 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த மாரி அடுத்த நாளும் 5 கோடியை வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாள் ஒரு கோடி கூடுதலாக 6 கோடி வசூல் செய்து சாதனையே படைத்துள்ளது மாரி.  தனுஷ் படங்களைப் பொறுத்தவரை இதுவே அதிகபட்ச வசூல். மாரி படத்துக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் பரவியதால் திங்கள் கிழமை முதல் மாரி படத்துக்கு வசூல் குறைந்துவிடும் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. அவர்களின் கணிப்பை மீறி மாரி திங்கள் கிழமை அன்று 3 கோடி வசூல் செய்துள்ளது. ஆக மொத்தம் முதல் 4 நாட்களில் இப்படம் கிட்டத்தட்ட 19 கோடியை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது.  முதல் 4 நாள் வசூலில் தனுஷ் படத்தின் அதிபட்ச வசூல் சாதனை இதுதான்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]