'பாகுபலி' இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஆரம்பம்...!





                                           பாகுபலி படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்து எதிர்பார்த்ததற்கம் மேல் வசூல் குவிந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூலாகியிருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். முதல் பாகத்தின் வசூல் அதிகமாக இருந்தாலும் பொதுவான ஒரு கருத்தாக கதை என்பது அழுத்தமாக இல்லை என்ற பேச்சும் அதிகமுள்ளது. அது மட்டுமல்ல அனுஷ்கா ஏன் கைதியாக இருக்கிறார், பிரபாஸை சத்யராஜே ஏன் கொலை செய்கிறார், ரம்யா கிருஷ்ணன் ஏன் ஒரு கைக்குழந்தையுடன் தப்பித்து வருகிறார். தமன்னாவும் சிலரும் ஏன் அனுஷ்காவை மீட்க மறைந்து வாழ்கிறார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு முதல் பாகத்தில் விடையில்லை. ஆனால், இந்த அத்தனை கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை இருக்கிறதாம். அது மட்டுமல்ல அனுஷ்காவின் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  இருக்கும் என்கிறார்கள். இரண்டாம் பாகம் முழுவதுமே பல திருப்பங்களுடன் கூடியதாக இருக்குமாம். அதற்கான பாதி வேலைகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் மீதியுள்ள வேலைகளை ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பித்து முடிக்க இருக்கிறார்களாம். அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த வேலைகள் முடிவடைந்து அதன் பின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முதல் பாகம் வெளிவந்தது போல ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்பாக கோடை விடுமுறையிலோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]