படவிழா கொண்டாட்டத்தில் பலியான ரசிகருக்கு சுதீப் உதவி..!





                                                         பெரும்பாலும் எந்த மொழி முன்னணி நடிகர்களாக இருந்தாலும், ரசிகர்களிடம் “உங்கள் குடும்பம் தான் முக்கியம். முதலில் அவர்களை கவனியுங்கள்.. கொண்டாட்டங்கள் எல்லாம் அப்புறம் தான்” என தவறாமல் சொல்லி வருவதை நாம் கவனித்துக்கொண்டுதானே வருகிறோம். ஆனாலும் சில நாட்களுக்கு முன் கன்னடத்தில் சுதீப் நடித்த ராணா பட ரிலீஸ் அன்று ஒரு தியேட்டரில் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது ராயப்பா என்கிற அவரது ரசிகர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

                                                         படம் வெற்றிபெற்றாலும், அதன் வெற்றியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியாத நிலைக்கு ஆளான சுதீப், அன்றைய தினமே தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக, “ரொம்ப நாட்கள் சிரமப்பட்டு உங்கள் அனைவரையும் சம்பாதித்திருக்கிறேன்.. கொண்டாட்டங்கள், பேனர் கட்டுவதை விட உங்கள் உயிர், வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம்” என கூறியிருந்தார். ஆனால் அவரது ரசிகர் வீட்டிற்கு சென்று சுதீப் ஆறுதல் கூறவில்லை என்றும் குடும்பத்திற்கு சுதீப் எதுவும் உதவி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.


                                                         இதை மறுத்துள்ள சுதீப் இறந்த தன ரசிகர் குடும்பத்திற்கு தனது ரசிகர்மன்றத்தின் மூலம் தேவையான உதவி செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, “அந்த ரசிகரின் வீட்டிற்கும் போயிருக்க முடியும் தான்.. ஆனால் தேவையில்லாமல் ஒரு பரபரப்பை உருவாக்க நான் விரும்பவில்லை.. அதுதான் காரணம்” என்று தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல செல்லாததற்கு காரணமும் கூறியுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]