திரிஷா-ஹன்சிகா மோதல் !






                                                     திரிஷா, நயன்தாராவுக்கு மோதல். இருவரும் எதிரும் புதிருமாக இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஒரு கட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த இருவரும் எங்களுக்குள் மோதல் இல்லை என்றனர். திரிஷா வீட்டில் நடந்த விழாவில் நயன்தாரா பங்கேற்று இருவரும் தோழிகளாக இருப்பதை உறுதி செய்தனர். தற்போது திரிஷா-ஹன்சிகா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு உள்ளது. சுந்தர் சி. இயக்கும் ‘அரண்மனை 2’ படத்தில் திரிஷா-ஹன்சிகா நடிக்கின்றனர். எனக்குதான் நிறைய காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்.சிக்கு நடிகைகள் இருவரும் பிரஷர் கொடுக்கிறார்களாம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



                                                          சுந்தர்.சி தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருப்பதாக யூனிட்டில் பேசுகிறார்கள். இந்த விவகாரத்தை இப்படியே விட்டால் சரிவராது என்பதால் திரிஷா-ஹன்சிகா இருவரையும் இணைத்து படத்துக்கு புரமோஷன் பாடல் படமாக்கி உள்ளார் சுந்தர். இதற்கிடையே திரிஷா-ஹன்சிகா இடையிலான பனிப்போரால் இருவரின் இமேஜும் பாதிக்கப்படும் என சினிமா நண்பர்கள் ஹன்சிகாவுக்கு அறிவுரை தந்தார்களாம். இதனால் உடனே இந்த விவகாரம் தொடர்பாக ஹன்சிகா கருத்து கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘திரிஷா எனக்கு சகோதரி போன்றவர்’ என்றார். அவருடன் சேர்ந்து செல்ஃபி படம் எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டும் உள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]