பந்து தாக்கியதில் ஆரோன் பிஞ்ச் படுகாயம்




                                          இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிளப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் பந்து தாக்கி படுகாயம் அடைந்தார். வொர்செஸ்டர்ஷேர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் யார்க்‌ஷேர் அணி சார்பில் களமிறங்கிய பிஞ்ச், 19 ரன் எடுத்திருந்தபோது கிறிஸ் ரஸ்ஸல் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயன்றார். 

                                          பந்து மட்டையில் படாமல் அவரது மார்பில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அவரது வாயில் இருந்து ரத்தம் வெளிவந்ததை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு ஓட்டலுக்குத் திரும்பிய அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். பரிசோதனை முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]