வங்கதேச அணியுடனான தோல்விக்கு தாம் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார்:தோனி





                                                             வங்கதேச அணியுடனான தோல்விக்கு தாம் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என தோனி தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்துக்குட்டி அணியான வங்கதேச அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடரை முதன் முறையாக வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.

                                                             இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி இந்திய அணியின் தோல்விக்காக கூறப்படும் அனைத்து காரணங்களையும் தான் ஏற்றுக்கொள்ள தயார் என்றும், கிரிக்கெட்டை தாம் மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.


                                                         
                                                               தம்மை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நினைத்தால் பதவி விலக தாம் தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடுவேன் என்றும் அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]