பூபதி ஜோடி தோல்வி




                                                                    ஏகான் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி,  கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கபால் ஜோடி தோல்வி அடைந்தது.
லண்டனில், ஏகான் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றின் 2வது போட்டியில், இந்தியாவின் மகேஷ் பூபதி,  கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கபால் ஜோடி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ், பிரேசிலின் ஆன்ட்ரி சா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய பூபதி ஜோடி, 2வது செட்டை 3–6 எனக் கோட்டைவிட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கர்’ சுற்றில் மீண்டும் ஏமாற்றிய இந்திய, கொலம்பிய ஜோடி 5–10 என இழந்தது.முடிவில், பயஸ் ஜோடி 6–4, 3–6, 5–10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url