ஆர்யா படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நயன்தாரா !




                                               சமீபத்தில் ஆர்யா நடித்த 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படம் 'யட்சன்'. பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்ந்தி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நாவலாசிரியர்கள் சுபா வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். யூடிவி நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆர்யா, தீபா சந்நிதி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு இருந்தபோது படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பொதுவாக தான் நடிக்காத படங்களின் படப்பிடிப்பிற்கு செல்லும் வழக்கம் இல்லாத நயன்தாரா, இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்தது ஆர்யா உள்பட அனைவரையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்கள் படக்குழுவினர்களுடன் பேசிவிட்டு அவர் சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 படப்பிடிப்புக்கு விசிட் அடித்த



சமீபத்தில் ஆர்யா நடித்த 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படம் 'யட்சன்'. பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்ந்தி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நாவலாசிரியர்கள் சுபா வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். யூடிவி நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.



                                                இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆர்யா, தீபா சந்நிதி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு இருந்தபோது படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பொதுவாக தான் நடிக்காத படங்களின் படப்பிடிப்பிற்கு செல்லும் வழக்கம் இல்லாத நயன்தாரா, இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்தது ஆர்யா உள்பட அனைவரையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்கள் படக்குழுவினர்களுடன் பேசிவிட்டு அவர் சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url