ஆஸ்துமா பிரச்னையை குணமாக்கும் மூலிகை

                       




                                             ஆடாதொடை(வாசகா)
                                   (Adhatoda vasica)


தன்மை :

              வாதத்தை வளர்க்கும்.குரல் வளம் நன்றாக இருக்கும்.ஆடாதோடை சளி,இருமல் போன்ற நோய்களுக்கு  சிறந்த மருந்து.

தீர்க்கும் நோய்கள் :

   கபம்,பித்தம் தணியும் .இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளித்தள்ளும்.நாவறட்சி நீங்கும்.ஜுரத்தை போக்கும்.வாந்தி குணமாகும்.நீரிழிவு இதனால் மட்டுப்படும். அதிகமான இருமல் அல்லது நுரையீரல் தொற்று  காரணமாக ஏற்படும் ஈளைக்காச நோய் குணமாகும்.
                 பெண்களின் மாதவிடாய் கால உதிரப்போக்கு ,இரத்தக்கொதிப்பு  போன்ற பிரச்சனைகளுக்கு இது உதவியாக இருக்கும். சளி ,மூக்கடைப்பு,தொண்டை வலி,நெஞ்சில் கபம் ,ஆஸ்துமா  போன்ற கபம் சம்பந்த்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.


By Kathiresan
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url