விஜய்யின் 59வது படம் துவங்கியது!



                                                            புலி படத்தை தொடர்ந்து விஜய்யின் 59வது படம், சென்னை, ஈசிஆர்., ரோட்டில் சற்றுமுன் துவங்கியது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் புலி. சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம், புலி, திரையில் பாய இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு விஜய், ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி.யின் 50வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யின் இந்தப்படத்தை  பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. இப்படத்தின் பட பூஜை இன்று(ஜூன் 26ம் தேதி), சென்னை, ஈசிஆர்., ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து இன்று சில காட்சிகளும் படமாக்கப்பட்டது.

                                               சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் துவக்க விழாவில் விஜய், அட்லி, ஜி.வி.பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், அட்டகத்தி ரஞ்சித், பிரபு, ராதிகா, அபிராமி ராமநாதன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜய்யின் 59வது பட பூஜையில் ரஜினி பங்கேற்பார் என சில நாட்களாக ஒரு தகவல் வௌியானது, ஆனால் அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. மேலும் இப்படத்தின் பூஜையில் இப்பட ஹீரோயின்களான சமந்தா, எமி ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]