இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி : தொடரை வென்றது வங்கதேசம்




                                                           வங்கதேசம்-இந்திய அணிகளுக்கிடையே மிர்பூரில் நடைபெற்ற  2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வங்கதேசம்  ஒருநாள் தொடரை கைப்பற்றியது.  முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா அணி 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டடு போட்டி பாதிக்கப்பட்டது. பின் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.


                                                           இதையடுத்து 'டக் வெர்த்லீவிஸ்' முறைப்படி வங்கதேச அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்ற வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]