ஜூலை 17'லிருந்து விலகியது மாரி.?!



                                                  காதலில் சொதப்புவது  எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன்,அடுத்தப்படியாக துல்கர் சல்மானை வைத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே மாரி படத்தினை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.  அன்றைய தினம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூலை 17ம் தேதி மும்முனை போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ஜூலை 17ம் தேதி ரேஸிலிருந்து மாரி விலகிவிட்டதாக தற்போது தவகல் வெளியாகியுள்ளது. மாரி படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் எடுக்க வேண்டியிருப்பதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனும், சிம்புவும் மோத உள்ளனர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url